மயிலம், மே 5: மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கூட்டேரிப்பட்டு, சந்தைமேடு பகுதியில் மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டேரிப்பட்டு சந்தைமேடு சுடுகாடு அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அருள் மகன் ஜீவா(எ) ஜீவேந்திரன் (24) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். மேலம் அவரிடமிருந்து 5 கிராம் அளவு கொண்ட பத்து கஞ்சா பாக்கெட்டுகள், சிறிய எலக்ட்ரானிக் எடை கருவி மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.