ஈரோடு, மார்ச் 12: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கீபு (40). இவர் ஈரோடு குமலன்குட்டை பகுதியில் தங்கி, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி பெருந்துறை சாலையில் சென்றபோது கீபு மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கீபு உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயங்கி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு
0
previous post