சிவகாசி, ஜூன் 5: சிவகாசி அருகே மனைவி, மாமனாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே ஆனையூர் லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(30). இவரது மனைவி விக்டோரியா (28). அந்த பகுதியில் பொங்கல் திருவிழா நடந்து வரும் நிலையில் தனது பெற்றோருக்கு புது ஆடைகள் எடுத்து தரும்படி விக்டோரியா தனது கணவனிடம் கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விக்டோரியா போலீசில் புகார் செய்தார். போலீசார் கருப்பசாமியை அழைத்து கண்டித்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கருப்பசாமி, மனைவி விக்டோரியாவிடம் மீண்டும் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கி உள்ளார். இதில் விக்டோரியாவுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க வந்த மாமனார் ஜெயராமனையும் தாக்கி உள்ளார். இதில் அவருக்கும் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.