கடத்தூர், ஏப்.24: கடத்தூர் எஸ்ஐ நவீன் மற்றும் போலீசார், புதுரெட்டியூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நல்லகுட்லஅள்ளியை சேர்ந்த சின்னவன் (எ) சின்னசாமியை(60) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மது விற்ற முதியவர் கைது
0
previous post