ஈரோடு,பிப்.23: ஈரோடு டவுன் மதுவிலக்கு எஸ்.ஐ பிரகாஷ் தலைமையிலான போலீசார், அசோகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த நபர் 46 புதூரைச் சேர்ந்த சசிகுமார் (49) என்பதும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, நரிப்பள்ளம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் மது விற்பனை செய்து வந்த அசோகபுரத்தைச் சேர்ந்த லோகநாதன், குமார் (47) ஆகியோரை கைது செய்த சித்தோடு போலீசார், அவர்களிடம் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கர்நாடக மது விற்றவர் கைது: ஆசனூர் அடுத்த தோட்டப்புரத்தில் ஒருவர் கர்நாடக மதுவை விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ஆசனூர் போலீசார், தப்பியோட முயன்ற தாளமலை அடுத்த முதியனூரைச் சேர்ந்த ரங்கராம் (38) என்பவரை பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 6 பாக்கெட் மதுவை பறிமுதல் செய்தனர்.