நாமக்கல், ஜூன் 7: நாமக்கல்லில் மதுவிலக்கு வாகனங்கள் ரூ.7.97 லட்சத்திற்கு பொதுஏலம் விடப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுவிலக்கு போலீசாரால் சாராய வேட்டையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நேற்று பொது ஏலம் விடப்பட்டது. மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமையில், ஏடிஎஸ்பி தனராசு மற்றும் போலீசார் ஏலத்தை நடத்தினர். இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த டூவீலர் மற்றும் கார் மெக்கானிக்குகள் கலந்துகொண்டு ஏலம் கேட்டனர். ஒட்டு மொத்தமாக 4 டூவீலர்கள், 3 கார்கள் ஏலம் போனது. இதில் அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு வாகனங்கள் தரப்பட்டது. மொத்தம் ரூ.7.97 லட்சத்திற்கு வாகனங்கள் ஏலம் போனது.
மதுவிலக்கு வாகனங்கள் ரூ.7.97 லட்சத்திற்கு ஏலம்
0
previous post