மதுரை, அக். 14: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல மக்கள் குறைதீர் முகாம் வரும் அக்.17ம் தேதி (செவ்வாய்க கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளான வார்டு எண்.1 விளாங்குடி, வார்டு 2 கரிசல்குளம், 15 ஜவஹர்புரம், 20 விசாலாட்சி நகர், 21 அருள்தாஸ்புரம், 22 தத்தனேரி மெயின் ரோடு, 23 அய்யனார் கோவில், 24 மீனாட்சிபுரம், 25 பீ.பீ.குளம், 26 நரிமேடு, 27 அகிம்சாபுரம், 28கோரிப்பாளையம், 31 தல்லாகுளம், 32 சின்னசொக்கிக்குளம், 33 கே.கே.நகர், 34 அண்ணா நகர், 35 சாத்தமங்கலம், 63 பாத்திமா நகர், 64 பெத்தானியாபுரம், 65 பி.பி.சாவடி, 66 கோச்சடை பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.