மதுரை, அக். 4: மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்து சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சுகாதார சீர்கேடுகள் மற்றும் கொசு தொல்லைகள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார பணிகளை வேகப்படுத்துவதோடு, கொசு ஒழிப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்களும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.