சேலம், செப்.21: சேலம் அஸ்தம்பட்டியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடந்த 2ம் தேதி அந்த மசாஜ் சென்டரில் அஸ்தம்பட்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மசாஜ் சென்டரின் மேலாளர் மானு என்பவரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 5 பெண்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மசாஜ் சென்டரின் உரிமையாளர் மற்றும் ஒரு சில பெண்கள் மீது வழக்கு போடாமல் அவர்களை தப்பவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, கடந்த 2ம் தேதி மசாஜ் சென்டரில் ஆய்வுக்கு சென்ற அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர், போலீசார் மற்றும் நுண்ணறிவு பிரிவு எஸ்எஸ்ஐ ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனரும் விசாரித்து வருகிறார். இதனால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மசாஜ் சென்டரில் சோதனையிட்ட ேபாலீசாரிடம் கமிஷனர் விசாரணை
55
previous post