செய்முறை:வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு ஃபோர்க்கின் பின்பகுதியால் நன்கு மசிக்கவும். அதனுடன் மைதா மாவு,; தயிர்,; சர்க்கரை,; உப்பு, நெய், சமையல் சோடா சேர்த்துப் பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது சிறிதாக தண்ணீர்விட்டுப் பிசையவும்).; மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி ஐந்து மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துத் திரட்டிய பூரிகளைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதிகம் சிவக்காமல் பொரித்தெடுக்கவும்.
மங்களூர் பன்ஸ்
43
previous post