Thursday, June 19, 2025
Home மாவட்டம்திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலஉதவி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலஉதவி

by Neethimaan

திருச்சி, மே20: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன்,

தொழிலாளா்நல வாரியம் தொடா்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 591 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் உத்தரவிட்டார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியை மாவட்ட வழங்கினார். மேலும், திருச்சி மாவட்டத்தில், பொதுமக்களிடையே கண்தான விழிப்புணா்வு, பார்வையற்றோர்களுக்குத் திருமணம் மற்றும் பார்வையற்றோருக்கான நல உதவிகள் வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகளில் சமூகப் பொறுப்புணா்வுடனும் மனித நேயத்துடனும் சிறப்பாக பணியாற்றயதைப் பாராட்டி 8 நபா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் நல்லையா, துணை கலெக்டர் (அகதிகள் முகாம்) நஜிம்முனிசா, உதவி ஆணையா் (கலால்) உதயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா் ஜெயசித்ரகலா, மாவட்ட ஆய்வுக்குழு அலவலா் நடசேன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi