புவனகிரி, மே 19: புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருணா(22). இவர் கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை. இதனால் இவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் அருணா கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து முருகன், புவனகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் மாயம்: தந்தை புகார்
64
previous post