Monday, May 29, 2023
Home » மகளிர் யூ19 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

மகளிர் யூ19 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

by kannappan

பிரிட்டோரியா: மகளிர் யூ19 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் பாட்சஸ்ட்ரோமில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி; 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. ஜார்ஜியா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். முதல் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்து அணியால் விரைவாக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. பர்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய யு-19 அணி; 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 8 விக்கெட்களை வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி இறுதி வெற்றி பெற்றது. சிறப்பாகப் பந்துவீசிய பர்ஷவி சோப்ரா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார். முதல்முறையாக நடைபெறும் மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. …

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi