உடன்குடி, மே 23: உடன்குடி பெரியதெருவைச் சேர்ந்தவர் நூஷ்ரா பானு(25). இவருக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த முகமது அசாரூதீன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது 2 வயது மகன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் திடீரென இறந்தான். இதனால் ஏற்பட்ட வேதனையில் உடன்குடியில் உள்ள தாய் வீட்டிலேயே இருந்துவந்த நூஷ்ரா பானு, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தகவலறிந்து விரைந்துசென்ற குலசேகரன்பட்டினம் போலீசார், நூஷ்ராபானுவின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். திருமணமான 3 ஆண்டுகள் ஆன நிலையில் இளம்பெண் இறந்தது தொடர்பாக திருச்செந்தூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
மகன் இறந்த துக்கம் தாளாமல் உடன்குடியில் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை
65
previous post