திருச்சி, மே 30: திருச்சியில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கீழசிந்தாமணி காந்திநகரை சேர்ந்தவர் முரளி(30), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 27ம் தேதி இரவு சிந்தாமணி அண்ணா வளைவு பகுதியில் நின்று கொண்டுஇருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர், திடீரென பணம் வேண்டும் என முரளியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி முரளி வைத்திருந்த ₹ 3 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இது குறித்து, கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, மேலசிந்தாமணி நடுதெருவை சேர்ந்த விஜய் (22) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.