புதுச்சேரி, மே 10: புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (50). சம்பவத்தன்று காலை இவர் மறைமலை அடிகள் சாலையில் அதிக மதுபோதையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மற்றொரு நபர் ஒருவர் மதுபோதையில் வந்து இளங்கோவின் சட்டை பாக்கெட்டில் கை வைத்துள்ளார். உடனே இளங்கோ கண் விழித்து யார் நீ என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது அந்த நபர் அருகில் கிடந்த சென்ட்ரிங் பலகையை எடுத்து இளங்கோ தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இளங்கோ மனைவி மற்றும் உறவினர்கள் வந்து அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக இளங்கோ, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.