பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் முகாமை திமுக நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் மகளிருக்கான உரிமை தொகை வழங்க முகாம்கள் நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பகுதியில் 28 வார்டுகளுக்கு 6 இடங்களில், முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்க விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமினை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விசுவநாதன் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். அவருடன் திமுக நகர செயலாளர் ரவிக்குமார். தனியார் வங்கி செயலாளர் பாஸ்கரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.