Friday, September 22, 2023
Home » பொன்னமராவதி மாணவர்கள் சாதனை

பொன்னமராவதி மாணவர்கள் சாதனை

by Suresh

பொன்னமராவதி, செப். 4: திருமயம் குறுவட்ட அளவில் நடந்த தடகளப் போட்டிகளில் பொன்னமராவதி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். பொன்னமராவதி அமல அன்னை மேல்நிலைப் பள்ளியின் தடகள வீரர்கள் தொடர் சாதனை பெற்றுள்ளனர். 14 வயதிற்கு உட்பட்ட பிரிவு (ஆடவர்) 100 மீ, 200மீ ஆகிய போட்டிகளில்கதலீஸ்வரன் முதலிடம், தடைதாண்டும் போட்டியில் 3ம் இடம் பெற்று பிடித்துள்ளனர். 17 வயதிற்கு உட்பட்டவர்கள் (ஆடவர்) கிசோர் தடை தாண்டும் போட்டியில் 3ம் இடம், முகமது தாரிக் 100 மீ 3ம் இடம், துர்கேஸ்வரன் வட்டு எறிதலில் 3ம் இடம், தொடர் ஓட்டத்தில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் கிசோர் பொன்னையா, முகமது தாரிக், யோகேந்திரன் முதலிடம் பெற்றுள்ளனர்.

19 வயதிற்கு உட்பட்டவர்கள் (ஆடவர்) கிசோர் குமார் 100 மீ முதலிடம், தடை தாண்டும் போட்டி முதலிடம், 200மீ முதலிடம், சிராஜ் ஈட்டி எறிதல் முதலிடம், வட்டு எறிதல் முதலிடம், மும்முறைத் தாண்டுதல், ட்ருபில்சம் முதலிடம். 400 மீ 19 வயதிற்கு உட்பட்ட ஆடவர் பிரிவில் 2வது இடம், கிசோர் குமார், விஸ்ணு, அப்துல் ஆரிப், முகில்குமார் 3வது இடம் பிடித்தனர். 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு பிரகதீஸ்வரி வட்டி எறிதலில் 2ம் இடம், 17 வயதிற்கு உட்பட்டவர்கள் பெண்கள் பிரிவில் கலைச்செல்வி 100 மீ முதலிடம், சந்தியா 100 மீ ,200 மீ 2ம் இடம், 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு அக்சயா 200 மீ 2ம் இடம், தீக்சனா வட்டு எறிதலில் 3வது இடம். 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு தொடர் ஓட்டம் 400 மீ 3வது இடம் கலைச்செல்வி சந்தியா, கண்மணி அக்சயா ஆகியோர் சாதனை படைத்தனர்.

17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு 400 தொடர் ஓட்டம் 3வது இடம் கலைச்செல்வி, சந்தியா, கண்மணி, அக்சயா ஆகியோர், திருமயம் குறுவட்ட அளவில் தனிப்பெரும் விளையாட்டு வீரராக கிசோர்குமார், சிராஜ் இருவர் உருவெடுத்துள்ளார்கள். இருவரும் ஒரே புள்ளிகளைப் பெற்று வெற்றிக் கோப்பையை பகிர்ந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் அழகப்பன், பூமிநாதன், மெர்லின் ரம்யா ஆகியோர்களை பள்ளியின் முதல்வர் மரியபுஸ்பம், ரிபீனா , ஆன்டோ , துணை முதல்வர் பிரின்ஸ் , முதுகலை ஆசிரியர் பாலமுரளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?