பொன்னமராவதி, ஜூன் 19: பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு மஹாருத்ரஹோமம், அபிஷேகம், சிறப்பு யாகம், அலங்காரம், வெள்ளி அங்கி சாத்துதல் வடை மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், விழாக்குழு நிர்வாகிகள்; சேதுபதி, பாஸ்கர், குமரன், முருகேசன், சதீஷ்கமார், தியாகு உட்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல, பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.