நத்தம், மே 7: நத்தம் அருகேயுள்ள பாப்பாபட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (48). விவசாயி. இவர் நத்தம்-வெள்ளக்குட்டு பகுதியில் மாங்காய் குடோனில் மாங்காய்களை கொடுத்து விட்டு, டூவீலரில் மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார். நத்தம் அவுட்டர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமதுமஸ்தான் (24) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், மோதியதில் கனகராஜிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.