பெரும்புதூர், ஏப்.28: செங்கல்பட்டு மாவட்டம், பனங்காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (54). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார், இந்நிலையில், நேற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தனது பைக்கில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார்.
முடிச்சூர் அடுத்த வரதராஜபுரம் சுங்கசாவடி அருகே சென்றபோது நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் ராஜாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பிரிவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது, விசாரணை நடத்தி வருகின்றனர்.