Tuesday, June 24, 2025
Home மாவட்டம்பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள்

by Neethimaan

பெரம்பலூர்,மே.20: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறு அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். 325 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், போதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (19ம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வருகைதந்த கலெக்டர் முன்னதாக கலெக்டர் அலுவலக வராண்டாவில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது மாற்றுத் திறனாளி நபர் ஒருவர் தனக்கு காதொலி கருவி வேண்டி மாவட்டக் கலெக்டரிடம் மனு கொடுத் ததை தொடர்ந்து, மனுவை விசாரித்த மாவட்டக்கலெக்டர் உடனடியாக அந்த பயனாளிக்கு ரூ.2,850 மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி களில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப் படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அளித்த முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல்,

இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மாவட்டக் கலெக்டர் மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 325 மனுக்கள் பெறப்பட்டது. இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் சொர்ண ராஜ், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் சுரேஷ் குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
மாற்றுத் திறனாளி நபர் ஒருவர் தனக்கு காதொலி கருவி வேண்டி மாவட்டக் கலெக்டரிடம் மனு கொடுதார். மனுவை உடனடியாக விசாரித்து அந்த பயனாளிக்கு ரூ.2,850 மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கி கலெக்டர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi