பெரம்பலூர், ஜூன் 27: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழியை காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையம் மற்றும் காவல்துறை அலுவலகங்களில் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.