பெரம்பலூர்,ஜூன் 5: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில்- எஸ்பி அலுவலக வளாத்தில் நடந்த சிறப்பு மனு முகாம், 28 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று 4ம் தேதி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி பொதுமக்களிடம் நேரடி யாக மனுக்களைப் பெற்றார்.
இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) பாலமுருகன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கலமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி. களத்தூர், மருவத்தூர், பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவு, பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் நகரம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த மனு முகாமில் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 28 மனுக்கள் பெற்றப் பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் பேசிய மாவட்ட எஸ்பி, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடை பெறும். பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து புதுபஸ்டாண்டு செல்லவும் ஏதுவாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.