வந்தவாசி, ஜூன் 10: வந்தவாசி அடுத்த பருவதம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி தேன்மொழி(56) தம்பதிக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். தம்பதி மட்டும் தனியாக கிராமத்தில் உள்ள வீட்டில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயபாலன் தேன்மொழி இருவரும் உறங்குவதற்காக பின்பக்க கதவு காற்று வசதிக்கு திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை திடீரென கழுத்தில் இருந்த தாலி சரடை மர்ம நபரை அறுத்ததால் பதறி துடித்த தேன்மொழி கூச்சலிட்டு உள்ளார். அப்போது கழுத்தில் இருந்த தாலி சரடை அறுத்து மர்ம நபர் பின்பக்க வழியாக ஓடியது தெரியவந்தது. தாலியில் இருந்த தங்கத்தாலான ஞானகுழாய் உள்ளிட்ட ஒரு சவரன் தங்க நகை திருடு போனது. இதுகுறித்து தேன்மொழி நேற்று தேசூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தாலி சரடை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க தாலி சரடு பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே தூங்கிகொண்டிருந்தபோது
0