Tuesday, June 24, 2025
Home மாவட்டம்பெரம்பலூர் பெண்களின் மேன்மைக்காக சமூகசேவை விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் அைழப்பு

பெண்களின் மேன்மைக்காக சமூகசேவை விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் அைழப்பு

by Neethimaan

பெரம்பலூர்,மே 20: பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களின் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தகவல். இதுபற்றி அவர் கூறியதாவது : சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்தசமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் 2025 ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு (ம) சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கபடவுள்ளது.

மேலும் இந்த விருதுக்குத் தகுதியானோர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகத் கொண்டவராகவும்,18 வயது மேற்பட்டவரகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாட்டு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மென்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொண்டு நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (< https://awards.tn.gov.in/ >) வருகிற ஜூன்மாதம் 12ம்தேதி மாலைக்குள் இணையதளம் மூலமாகவே பதிவு செய்து, ,பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தொலைபேசி எண் : 04328-296209 பெரம்பலூர்- என்ற முகவரியில் அணுகி விண்ணப்பம் செய்த விவரத்தினை தகுந்த ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi