வேலூர், ஜூன் 20: வேலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த கீழ் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு(36). இவர் அதேபகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி சிற்றரசு வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிற்றரசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிற்றரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிற்றரசு மனைவி காஞ்சனா கொடுத்த புகாரின் பேரில் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிற்றரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து பலி வேலூர் அருகே
0
previous post