தர்மபுரி, ஆக. 31: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், நேற்று நடந்த பெட்டிஷன் மேளாவில் 97 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று பெட்டிஷன் மேளா நடந்தது. முகாமிற்கு மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து, புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்பத் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 118 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 97 மனுக்கள் மீது விசாரணை முடித்து வைக்கப்பட்டது. 21 மனுக்கள் நிலுவையில் உள்ளது. முகாமில் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சரவணன், செந்தில்குமார் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் கலந்து கொண்டனர்.