வருசநாடு, ஜூன் 24: கண்டமனூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலில் கண்டமனூர் போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரங்கநாதர் கோயில் தெருவை சேர்ந்த சேர்மதுரை, ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகியோர் கடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடைகளில் இருந்த ரூ.3864 மதிப்புள்ள 4 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.