தர்மபுரி, மே 8: ராயக்கோட்டை அருகே செங்கொடிசினஅள்ளியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் தனலட்சுமி (16). அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். கோடை விடுமுறை என்பதால், ஈரோட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றிருந்த தனலட்சுமி, நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல தர்மபுரிக்கு பஸ்சில் வந்தார். ஆனால் அங்கிருந்து அவர் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது தாய் மாதம்மாள் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.