தர்மபுரி, ஏப்.24: பாலக்கோடு பஞ்சப்பள்ளி நீலாஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், லாரி டிரைவர். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு 11 மாதத்தில் மோகித் என்ற மகன் இருந்தான். கடந்த 14ம் தேதி குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கடந்த 20ம்தேதி, மீண்டும் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்தபோது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்து 11 மாதமே ஆன ஆண் குழந்தை திடீர் சாவு
0