Thursday, July 10, 2025
Home மாவட்டம்திருநெல்வேலி பாளையில் தகராறை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

பாளையில் தகராறை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

by MuthuKumar

நெல்லை, ஜூன் 23: பாளையங்கோட்டை வஉசி விளையாட்டு மைதானத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்ட போது தட்டிக்கேட்ட மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகம்மதுஅப்துல்லா (26). இவர் மணிமுத்தாறு பட்டயாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவரும், அவரது மனைவியும் பாளையங்கோட்டையிலுள்ள வஉசி விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 பேர் ெகாண்ட கும்பால் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனையறிந்த முகம்மதுஅப்துல்லா அந்த கும்பலை சமாதானபடுத்தி தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த 2 பேர் அரிவாளால் முகம்மதுஅப்துல்லா கையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனை கண்டு அவரது மனைவி அலறி கூச்சல் போட்டார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் போலீஸ்காரரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசிபாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi