பழநி, மே 28: தமிழக அரசின் நீர்வளத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா
வது: பழநி வட்டம், பா லாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு இன்று (28.05.2025) முதல் 24.09.2025 வரை 120 நாட்களுக்கு, நீரிழப்பு உள்பட 155.52 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்மூலம் பழநி வட்டத்திலுள்ள புதச்சு, பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள 501 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.