Wednesday, July 9, 2025
Home மாவட்டம்காஞ்சிபுரம் பாம்பு கடித்து டிரைவர் பலி

பாம்பு கடித்து டிரைவர் பலி

by Ranjith

 

செங்கல்பட்டு, ஜூன் 26: மறைமலைநகர் அருகே தூங்கும்போது பாம்பு கடித்து கார் டிரைவர் பரிதாபமாக பலியானார்.  மறைமலைநகர் அருகே ரயில் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (51). இவர் ஆக்டிவ் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பணி முடித்துவிட்டு நேற்று வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் பாம்பு கடித்துள்ளது. அவரின் அலறல் சட்டத்தை கேட்டு அவரின் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக இவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்பு பாம்பு கடித்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi