தர்மபுரி, ஏப்.22: தர்மபுரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் அதிகாரிகள், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பென்னாகரம் மெயின்ரோடு, சேலம் பைபாஸ் சாலையில் உள்ள 2 பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கடைகளில் இருந்து ரூ.1000 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்து, கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பான்மசாலா விற்ற 2 கடைகளுக்கு ரூ.50,000 அபராதம்
0
previous post