பாலக்கோடு, ஜூலை 3: மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் நந்தினி (20). இவரும், அதே பகுதியை சேர்ந்த காவேரி மகன் ஏழுமலை (23) என்பவரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாதம் 15ம்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருச்சியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு, நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர்.
பெற்றோரின் புகாரின் பேரில், போலீசார் தேடுவதை அறிந்து, நேற்று மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.இதையடுத்து, போலீசார் இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இவர்களது திருமணத்தை நந்தினியின் பெற்றோர் ஏற்காததால், அவரை கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.