மரக்காணம், ஏப். 23: செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன்(33). இவர் மரக்காணம் அருகே முறுக்கேரி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்துள்ளார். இவருக்கும் வண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (28) என்பவரது அக்கா ஜோதிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், நாகேந்திரனுக்கும் அவரது மனைவி ஜோதிக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துவந்தனர். மேலும் இவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் நாகேந்திரன் குடிபோதையில் அவரது மனைவியிடம் பிரச்னை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த சுந்தர்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று தட்டிக்கேட்டபோது நாகேந்திரனுக்கும் மைத்துனர் சுந்தர்ராஜுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜ் அக்கா கணவர் நாகேந்திரன் மண்டையில் தடியால் அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த நாகேந்திரன் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகேந்திரன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தனர். க்கு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.