சேந்தமங்கலம், ஜூன் 3: சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செந்தில் அரசு தலைமை வகித்தார். விழாவில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். மேலும் கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்கப்பட்டது. நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தரம், பொருளாளர் ராஜசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் காந்திமதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சசிகுமார், குரு இளங்கோ, கந்தசாமி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
0
previous post