திருப்பூர், ஜூலை6:பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிட்டு வரும் நிலையில் இதற்காக பள்ளி அளவில் மாணவர்களை தேர்வு செய்யும் போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மாநகர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குறுமைய செஸ் போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொ) பஷீர் அகமது தலைமையில் நடந்த இப்போட்டியில் 46 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.14, 17 வயதினருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் என 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ, மாணவிகள் குறுமைய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். குறுமைய அளவிலான செஸ் போட்டிகள் வருகின்ற 15ம் தேதி நடைபெற உள்ளது.