மாமல்லபுரம்: அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டல பகுதிகளில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது, என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. நெம்மேலியில் உள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 17ம் தேதி காலை 9 மணி முதல் 18ம் தேதி காலை 9 மணி வரை மண்டலம் 13 (அடையாறு), மண்டலம் 14 (பெருங்குடி) மற்றும் மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்) ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.