ராசிபுரம், மே 11: வெண்ணந்தூர் பகுதியில் ஆட்டையாம்பட்டி-ராசிபுரம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், ஆரம்ப காலம் முதலே, இந்த பஸ் நிலையம் முழுமையாக செயல்படவில்லை. அலவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெள்ளப்பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் பகுதியை அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், பழந்தின்னிபட்டி, மாட்டுவேலம்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பேருந்திற்காக காத்திருக்கும் முதியவர், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
0