செய்முறைஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சீரகம், வெங்காயம் சேர்த்து வைக்கவும். பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள், மிளகாய்த்தூள், சீரகப் பவுடர், கொத்தமல்லி பவுடர், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். பின் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கியபின் பிரியாணி மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கியவுடன் அதில் பனீரை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்து பின் அதில் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, Fried onion, நெய் சேர்த்து வேக வைத்த அரிசியை சேர்த்து தம் போட்டு மூடி வைக்கவும். (5 நிமிடம்) பின் அதில் கொத்தமல்லி, புதினா, நெய், குங்குமப்பூ தூவி Fried onion சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடம் வைத்து இறக்கினால் கமகமக்கும் சுவையான பனீர் பிரியாணி தயார். இதனுடன் பனீர் ஃப்ரை மற்றும் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.குறிப்பு: தயிர் பச்சடி செய்யும் முறை மற்றும் பாஸ்மதி அரிசியை தம் போட வேக வைக்கும் முறையை முன்பக்கம் காண்க.
பனீர் பிரியாணி
85
previous post