Tuesday, March 25, 2025
Home » நெல்லையில் நாளை இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம் துணை இயக்குநர் அருண் தகவல்

நெல்லையில் நாளை இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம் துணை இயக்குநர் அருண் தகவல்

by Karthik Yash

நெல்லை, மார்ச் 4: நெல்லை இஎஸ்ஐ துணை மண்டல அலுவலக துணை இயக்குநர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ) நெல்லை துணை மண்டலம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால், அதை நிவர்த்தி செய்ய குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, குறை தீர்க்கும் முகாம் நாளை (5ம் தேதி) புதன்கிழமை மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. முகாமில் இஎஸ்ஐசி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக துணை இயக்குநர், மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இஎஸ்ஐ திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இஎஸ்ஐ பயனீட்டாளர்கள் குறைகள் ஏதேனும் இருந்தால் முகாமில் கலந்து கொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

11 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi