பந்தலூர், ஜூலை 1: நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். ஆணையாளர் சுவிதா முன்னிலை வகித்தார். தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து செயல் அறிக்கை அஜெண்டா வாசிக்கப்பட்டது. விசிக கவுன்சிலர் புவனேஷ்வரன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் ஷீலா, புவனேஷ்வரி, வசந்தகுமாரி, ஸ்ரீகலா மற்றும் அதிமுக கவுன்சிலர் ஜாபீர், செல்வராணி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் சூரியகலா, சித்ரா, விஜயா, சுயேச்சை கவுன்சிலர் ஷஷினா உள்ளிட்டோர் தலைவர் பாரபட்சமாக பணிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் சில வார்டுகளுக்கு எந்த பணிகளும் ஒதுக்கப்பட வில்லை எனவே இந்த அஜெண்டாவை நிராகரிப்பதாக கூறி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.