Friday, June 20, 2025
Home மாவட்டம் நூறுநாள் வேலை திட்டத்தில் 1,512 குளங்கள் உருவாக்கம்

நூறுநாள் வேலை திட்டத்தில் 1,512 குளங்கள் உருவாக்கம்

by Ranjith

 

விருதுநகர், மே 30: விருதுநகர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் 1512 குளங்கள் உருவாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன நூறு நாள் வேலை திட்டத்தில் புதிய சமுதாய குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் ஒன்றியத்தில் ரூ.10.97 கோடியில் 256 பணிகளில் 202 நிறைவு பெற்றுள்ளது. காரியாபட்டியில் ரூ.19.58 கோடியில் 193 பணிகளில் 168 நிறைவு பெற்றுள்ளன. நரிக்குடியில் ரூ.22.33 கோடியில் 127 பணிகளில் 114 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

அருப்புக்கோட்டையில் ரூ.19 கோடியில் 154 பணிகள் எடுக்கப்பட்டு 143 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சாத்தூரில் ரூ.12.112 கோடியில் 175 பணிகள் எடுக்கப்பட்டு 146 நிறைவு பெற்றுள்ளன. சிவகாசியில் ரூ.15.49 கோடியில் 167 பணிகள் எடுக்கப்பட்டு 116 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.10.95 கோடியில் 125 பணிகள் எடுக்கப்பட்டு 102 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
திருச்சுழியில் ரூ.11.55 கோடியில் 191 பணிகள் எடுக்கப்பட்டு 161 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

வத்திராயிருப்பில் ரூ.22.65 கோடியில் 103 பணிகள் எடுக்கப்பட்டு 95 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வெம்பக்கோட்டையில் ரூ.14.45 கோடியில் 189 பணிகள் எடுக்கப்பட்டு 161 நிறைவு பெற்றுள்ளன. மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் ரூ.176.21 கோடிக்கு 1,809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு 1,512 குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 297 பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi