Wednesday, July 9, 2025
Home மாவட்டம்ஈரோடு நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் பவானிசாகர் அணை 2 நாட்களில் 3 அடி உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் பவானிசாகர் அணை 2 நாட்களில் 3 அடி உயர்வு

by Arun Kumar

 

சத்தியமங்கலம், ஜூன் 18: பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 15278 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 86.77 அடியாகவும், நீர் இருப்பு 19.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 450 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi