நீடாமங்கலம், ஏப்.25: நீடாமங்கலத்திலிருந்து நாமக்கல் 2,000 டன் நெல் ரயில் மூலம் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வலங்கைமான் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் செயல் பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை சாகுபடி செய்த நெல் அறுவடை விற்பனை செய்த நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வேகங்களில் அரவைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தாலுக்கா பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கோள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த சன்ன ரகம் மற்றும் பொது ரக நெல் மூட்டைகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி,நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை,திறந்தவெளி சேமிப்பு மையம் ஆதனூர் உள்ளிட்ட இடங்களிலும் சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும் அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று மன்னார்குடி அருகில் உள்ள மூவாநல்லூர் செமி கவர்டு,தெற்கு நத்தம்,கீழ அமராவதி திறந்தவெளி சேமிப்பு மையங்கள்,நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் செமி கவர்டு ஆகிய இடங்களில் சேமித்து,வைத்திருந்த 2,000 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 42 ரயில் வேகன்களில் ஏற்றி அரவைக்கு நாமக்கல் அனுப்பி வைத்தனர்.