தேவதானப்பட்டி, ஏப். 28: தேவதானப்பட்டி அ.வாடிப்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் விவசாயி பூவனராசன்(42). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகன் குடும்பத்தினருக்கும் நிலம் தொடர்பான பிரச்னை வழக்கு நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பூவனராசன் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நாகன் மற்றும் அவரது மகன்கள் சவுந்திரம், மகேந்திரன், கார்த்தி, ஆகியோர் நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஏன் தண்ணீர் பாய்ச்சுகிறாய் என கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பூவனராசன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் நாகன், சவுந்திரம், மகேந்திரன், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.