நிலக்கோட்டை, ஜூன் 23: நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் (58). விவசாயி. இவரது மனைவி சுமதி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தரராஜன் குடும்ப செலவிற்காக தனது நிலத்தை வேறொருவருக்கு ஒத்திக்கு விட்டிருந்ததாகவும், அதனை மீட்க முடியாமல் இருந்து வந்ததாகவும், பின்னர் குடும்பத்தினர் கஷ்டப்பட்டு நிலத்தை மீட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுந்தரராஜன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் விளாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எஸ்ஐ ராமபாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.