தெலுங்கானா: நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் அமைந்துள்ள கமோல் கிராமத்தில் கிருஷ்ணையா என்பவரது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருஷ்ணையா உறவினரான மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மணமகனின் நெருங்கிய உறவினரும் நண்பருமான 19 வயது இளைஞர் முத்தியம் என்பவர் கலந்துகொண்டு சினிமா பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது முத்தியம் தீடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. …